TamilsGuide

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment