TamilsGuide

அளவெட்டி அரிசி ஆலையில் தீ பரவல்

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ பரவலினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment