TamilsGuide

வடக்கு கிழக்கு பகுதிகளில் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீPரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவிளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான இரும்பு திருடர்களை கைது செய்வதற்கும் , இரும்பு திருட்டுக்களை தடுக்கவும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்துட் வலி.வடக்கு பகுதிகளில் காணி இல்லாமல் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வலி.வடக்கில் இனம் காணப்பட்டுள்ள அரச காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment