TamilsGuide

பொன் விழாவைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்

யாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் இன்று தனது பொன்விழாவினைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாணவிகளின்  துவிச்சக்கர வண்டி பவனியும், நடைபவனியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள், நலன் விரும்பிகள் எனப்  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அயல் பாடசாலைகளான அப்பா பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி ஆகிய பாடசாலைகள்,  மாணவிகளுக்கு  அமோக வரவேற்பளித்து நீராகரம் வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment