TamilsGuide

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் இன்று வரை பிற்போடப்பட்டன.

இந்நிலையில்  தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஜீன் 29 ஆம் திகதி அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.  இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment