TamilsGuide

மிரிஹான பேருந்துக்கு தீ வைத்த சந்தேக நபர் 18 மாதங்களின் பின்னர் கைது

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் போது மிரிஹானவில் இராணுவத்தினர் பயணித்த பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தின் போது, கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு பாதுகாப்புக்கு என ஈடுபடுத்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் பயணித்த பேருந்துக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டது.

இந்நிலையில் மஹியங்கனை புஜாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் மூலம் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment