TamilsGuide

கனடாவில் அயலவர் வீட்டு மரங்களை சேதப்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த நிலை

கனடாவில் அயலவர் வீட்டு மரங்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

மரங்களுக்கு சேதம் விளைவித்த குறித்த பெண்ணுக்கு 150000 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே அண்டை வீட்டிற்குள் பிரவேசித்து மரங்களை பல சந்தர்ப்பங்களில் சேதப்படுத்தியதாக இந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுக்விந்தர் கவுர் கட்டர் என்ற பெண்ணே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் அண்டை வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் புகைப்படங்கள் காணொளிகள் என்பன ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave a comment

Comment