TamilsGuide

நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை குறித்த போராட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி நேற்று தடை விதித்துள்ளார்.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment