TamilsGuide

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தண்டப்பணம்

தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு, அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபாய் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மேலும், முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்த்து வைப்பதற்காக இந்த தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மட்டும், முன்னர் அறிவிடப்பட்ட 250 ரூபாயை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment