TamilsGuide

மெனிங்கோகோகல் பக்டீரியா இலங்கையில் அடையாளம்

காலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை பிரதேசத்தில் உள்ள சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment