TamilsGuide

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் , உயிலங்குளம் பகுதியில்  சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவரை நேற்றைய தினம்  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றிலேயே குறித்த நபர் போதைப் பொருளைக்  கடத்தி வந்துள்ளார் எனவும்,  அவரிடமிருந்து 3 கிலோ 394 கிராம் நிறைகொண்ட  ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
 

Leave a comment

Comment