TamilsGuide

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா

தொண்டைமனாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இன்றைறைய நாள் தேர்த் திருவிழாவில் தமது நேர்த்திக்கடனுக்காவும் முகனை தரிசிக்கவும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்திருந்தனர்.
 

Leave a comment

Comment