TamilsGuide

பலாலியில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது பாலியல் அத்துமீறல்

யாழ். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மீது, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், மதுபோதையில் இருந்த குறித்த அதிகாரி தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் என பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்,  பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பொலிஸ் அதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment