TamilsGuide

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டை சுற்றிவளைத்த கும்பல்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்  கொழும்பிலுள்ள வீட்டினை தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று  சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது  ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும்  வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளதாகக்  கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தினையடுத்து  அவரது வீட்டுக்கு முன்பாக  பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment