TamilsGuide

கனடா செல்ல முயற்சி - கட்டுநாயக்காவில் சிக்கிய சிகை அலங்கார நிபுணர்

போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற பிரபல சிகையலங்கார நிபுணர் ஒருவரை கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான சிகையலங்கார நிபுணரே கைது செய்யப்பட்டவராவார்.

இவர் ஐக்கிய இராச்சியம் ஊடாக கனடா செல்ல முயற்சித்ததாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கனேடிய விசா தொடர்பில் எழுந்த சந்தேகம்
நேற்று (23) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் கரும பீடத்தில் வழங்கிய கனேடிய விசா தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அங்கு சந்தேக நபரை குடிவரவு எல்லை அமுலாக்க பிரிவு அதிகாரிகளிடம் முற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணையில் சந்தேகநபர் வழங்கிய விசா போலியானது என தெரியவந்துள்ளது.

45 இலட்சம் ரூபா பணம் கொடுத்து

மேலும், சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​45 இலட்சம் ரூபா பணம் கொடுத்து, தரகர் ஒருவரிடமிருந்து போலி அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதாக தெரிவித்தார். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 
 

Leave a comment

Comment