TamilsGuide

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், இன்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது.

சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்வு குழுவினால் இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அல்லிராஜா சுபாஸ்கரன் பிரித்தானியாவில் வாழும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஆவார்.

இவர் ஆசியாவின் மிகச்சிறந்த தொழிலதிபருக்கான தங்க விருது, “Voice of Asia” சர்வதேச தொழில்முனைவோர் விருது, Golden Peacock விருதுகளை பெற்றுள்ளதுடன், வணிக நிர்வாகம் மற்றும் தத்துவத்திற்கான கெளரவ கலாநிதிப் பட்டத்தை மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

Leave a comment

Comment