TamilsGuide

இதய நோயாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் இலங்கையில் கடந்த 10 வருட காலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தற்போது உட்கொள்ளும் உணவு முறைமை காரணமாகவே ஏற்படுகின்றது.

எனவே தாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment