TamilsGuide

15 மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிய தாராள உள்ளங்கள்

கல்முனையில், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கு ‘தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் கல்வி ஊக்குவிப்பு பரிசில்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக நன்கொடையாளரும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் மகளீர் பிரிவு தலைவியுமான திருமதி.ஷரேன் பியுமி(பிரான்ஸ்) ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இதன் போது உரையாற்றிய சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார்  “தாராள உள்ளங்கள் அறக்கட்டளையானது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறந்த சமூகசேவையாற்றி வருவதுடன் எமது மக்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார, உதவிகளை வழங்கி வருகின்றமை பாராட்டுதலுக்குறியது. தொடர்ந்தும் இவ்வாறான பணிகளை ‘தாராள உள்ளங்கள்‘ அறக்கட்டளை  செய்யவேண்டும் ”எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் ஜெ.ஜெயப்பிரகாஸ், செயலாளர் எஸ். ஸ்ரீகரன் பொருளாளர்,எஸ்.யுவசந்தராஜா  மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலரும்  கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment