TamilsGuide

தவறான மருந்தினால் பெண் ஒருவர் மரணம்

தனியார் மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்தினை மருந்தகம் வழங்கியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment