TamilsGuide

தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி உறுதி

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, விரிவான தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்றை ஆரம்பிக்கப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கடற்படை பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய பாதுகாப்புச் சபைக்கான நவீன பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்குவதற்கான மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment