TamilsGuide

வேலணை பிரதேச செயலகத்தில் பண்பாட்டு விழா

வேலணை பிரதேச செயலகத்தின்  பண்பாட்டு பெருவிழாவானது இன்றைய தினம் வேலணை மத்திய கல்லூரியின்  பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

வட  மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகமும், வேலணை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் அப் பிரதேசத்தைச்  சேர்ந்த 13 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டிருந்ததோடு அவர்களுக்கு  நினைவுப்  பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதத்க்கது.
 

Leave a comment

Comment