TamilsGuide

நாடாளுமன்ற பணிப்பெண்கள் விவகாரம் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும்

நாடாளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தில் உள்ள சில பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றும் நாளையும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகள் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் எந்த அதிகாரியும் தலையிட இடமளிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment