TamilsGuide

யாழில் வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப் பொறிக்க நடவடிக்கை

யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத்  திணைக்களத்தினால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தேவைப்பாடு உடையோர், தமது மோட்டார் வாகனப்  பதவுச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பவற்றுடன்  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு, குறித்த திகதிகளில் வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்  பொறித்துக்கொள்ள முடியும் என யாழ்.மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment