TamilsGuide

பெலரஸில் இருந்து சட்டவிரோதமாக போலந்திற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது

பெலரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் வார இறுதியில் போலந்திற்குள் செல்ல முயன்றன என போலந்து ஊடகம் தெரிவித்துள்ளது.

நான்கு சிரிய மற்றும் மூன்று பங்களாதேஷ் குடிமக்களை போலந்திற்கு கொண்டுசெல்வதற்கு உதவ முயற்சித்த மூன்று உக்ரேனிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்கனவே 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத எல்லைக் கடப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அடையாளங்களோ மேலதிக விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.
 

Leave a comment

Comment