TamilsGuide

மடு அன்னையின் ஆவணித் திருவிழா -ஜனாதிபதி பங்கேற்பு

இன்று இடம்பெற்ற மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணித்  திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலியைப்   பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை  தலைமையிலான ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

இந்நிலையிலேயே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள்  கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment