TamilsGuide

இளவரசர் வில்லியமுடன் கடும் சண்டையிட்ட இளவரசி

ராஜ குடும்பத்தை விட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி பிள்ளைகளும், மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்ப இருப்பதாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. ஒரு பக்கம் மன்னர் சார்லஸ் எப்போது வேண்டுமானாலும் தன் இளைய மகனை மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
  
அதேபோல, ஹரியின் அண்ணனான இளவரசர் வில்லியமும் தம்பியுடனான பகையை மறந்து அவருக்கு நேசக்கரம் நீட்ட விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு இளவரசி கேட்டுக்கு சம்மதம் இல்லை என்று தெரிகிறது. ஏற்கனவே ஹரியும், குறிப்பாக அவரது மனைவியான மேகனும் ராஜ குடும்பத்தை அவமானப்படுத்த நிறைய செய்துவிட்டதாக கருதும் கேட், அவர்களை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதித்தால் இன்னும் கூடுதல் பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதுகிறார்.

இதற்கிடையில், தான் தன் தம்பி ஹரியுடனான பகையை மறக்க விரும்புவதாக இளவரசர் வில்லியம் தன் மனைவி கேட்டிடம் கூற, கடும் கோபமடைந்தாராம் அவர்.

அதற்காக கணவனுக்கும் மனைவிக்குமிடையே பயங்கர சண்டை நடந்ததாம். இளவரசி கேட்டைப் பொருத்தவரை, அவர் ஒருபோதும் மேகனை மன்னிக்கவேமாட்டார் என்கிறது பிரித்தானிய ஊடகம் ஒன்று. 
 

Leave a comment

Comment