TamilsGuide

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு - காரைநகரில் சோகம்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான பெண்ணொருவர் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)  உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியைச்  சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்  ஆலயம் ஒன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த வேளை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளானர் எனவும் அதனை அடுத்து , வலந்தலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment