TamilsGuide

யாழ் பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று செஞ்சோலை படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது

யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர்.

இதனையடுத்து செஞ்சோலை படுகொலையின் நினைவுரை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டர் ஜெல்சினால் முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment

Comment