TamilsGuide

நோர்வூட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு  

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில்  வரத்தகம் மற்றும் தொழிற் தேர்ச்சி பிரிவுகளில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு  தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று மத்திய மாகாண   ”Chamber of Commerce & Industry” யினால்  கடந்த11 மற்றும் 12 ஆம் திகதிகளில்  நடத்தப்பட்டது.

இதில் மாணவர்கள் எதிர்கால தொழிற் சந்தைக்கு எவ்வாறு தயாராக வேண்டும், தொழிற்சந்தையில் காணப்படும் தொழில் வாய்ப்புகள், எவ்வாறான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், சுய தொழில் வாய்ப்புகள் போன்ற  பல விடயங்கள் தொடர்பான தெளிவான விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

Leave a comment

Comment