TamilsGuide

யாழில் ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் தாக்குதலையடுத்து வலியால் துடித்த மாணவனை அவரது பெற்றோர் வைத்திய சாலையில் அனுமதித்துள்ள நிலையில் மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment