TamilsGuide

கனடாவில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு....

கனடாவில் செல்லப் பிராணிகளை குறிப்பாக நாய்களை வளர்ப்போருக்கு ஓர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாய்களை கட்டி வளர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நாய்கள் கடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாய்கடி சம்பவங்கள் அண்மைக் காலமாக டொரன்டோவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே நாய்களை வளர்க்கும் நபர்கள் அவற்றை கட்டி வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாய்களை கட்டுப்படுத்தி வளர்ப்பது அதன் உரிமையாளர்களின் பொறுப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டொரன்டோவில் 1316 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது கடந்த 2021 ஆம் ஆண்டை விடவும் 39 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்களை கட்டி வளர்க்காத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு 365 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment