TamilsGuide

30 வருடங்கள் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்று 30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது. அந்த சாதனையை பாபி முறியடித்துள்ளது. இந்த நாய் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment