TamilsGuide

சாரி கேட்ட ரஜினிகாந்த்

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ரஜினிகாந்த் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். அப்போது அவருக்கு முன்னால் வரிசையில் பலர் நின்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் போலீசார் ரஜினியிடம் முன்னால் சென்று விடலாம் என கூறி அழைத்துச் சென்றனர். அப்போது ரஜினி, வரிசையில் நிற்பவர்களை பார்த்து "ரொம்ப நேரமா நிற்பீங்க... சாரி" என கூறி விட்டு சென்றார். இதையடுத்து அங்கு நின்றவர்கள் பரவாயில்லை என்று கூறி புன்னகைத்து ரஜினியை அனுப்பி வைத்தனர்.
 

Leave a comment

Comment