TamilsGuide

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாமல்

தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment