TamilsGuide

பம்பலப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தி உள்ளிட்ட மேலும் சில உள்நாட்டு செய்திகளின் தொகுப்பு அடுத்து மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து, குறித்த இரு வாகனங்களும் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், மதுவரி பரிசோதகர் உட்பட அந்த திணைக்களத்தின் 4 அதிகாரிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

மகிழுந்தில் இருந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த வாகனத்தின் மீது மதுவரி திணைக்கள அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மகிழுந்திலிருந்த நபர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment