TamilsGuide

வெள்ளவத்தை மோதலில் 10 பேர் காயம் - 05 பேர் கைது

வெள்ளவத்தை குரே மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பொரள்ளை பாடசாலைக்கும் மருதானை பாடசாலைக்கும் இடையிலான கால்பந்தாட்ட போட்டி நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டியின் பின்னரே மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போட்டியைக் காண வந்திருந்த குழுவினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களில் வசிக்கும் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

Leave a comment

Comment