TamilsGuide

டோனி வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்- பொம்மன் பெள்ளி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். அவர்களுடன் மாணவ-மாணவிகள் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய பொம்மன், பெள்ளி தம்பதியினர், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர். தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டனான எம்.எஸ்.டோனி விரைவில் முகாமுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a comment

Comment