TamilsGuide

யாழ் ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதியின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பூங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (05) யுவதியொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த யுவதி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமி அரியாலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment