TamilsGuide

சிறுவனை பலத்தகாரம் செய்ய முயன்ற பொலிஸ் கைது

சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த அறுபத்தொரு வயதுடையவர் ஆவார்.

ஏறாவூர் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பலாத்கார முயற்சி இடம்பெற்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஏறாவூர்; பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment

Comment