TamilsGuide

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது,

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

328 பொருட்களின் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் கடந்த மாதம் நீக்கியது.

இதற்கமைவாக இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பொருட்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் நான்காயிரம் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment