TamilsGuide

மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு

அனுராதபுரம் – புலங்குளம் பகுதியில் மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழந்துள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இந்த காட்டு யானை மலசலகூட குழிக்குள் விழுந்து மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் கலயாய வனவிலங்கு அலுவலகத்தின் வனவிலங்கு அதிகாரிகள் யானையின் சடலத்தை கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment