TamilsGuide

வைத்தியசாலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களை இணைத்து இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கச் செயலர் எஸ். பி. மடிவத்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த போராட்டங்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையை சுற்றி பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment