TamilsGuide

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போராட்டம்

வட மாகாண “டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள்” வட மாகாண சபை முன்பாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள்  இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2016 ஆண்டு முதல் வட மாகாணத்தில் 82 டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு 22 ஆயிரம் ரூபா வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிற போதிலும் அதில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வட மாகாண பிரதம செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவிடம் இது குறித்த மகஜர் ஒன்றை அவர்கள் கையளித்துள்ளனர்.

Leave a comment

Comment