TamilsGuide

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள் - சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு

The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமையன்று, சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், புகலிடக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்த அந்த தீர்மானம், எல்லை கடந்து பயணிக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் தொடர்பான விதிகளை மாற்றுதல், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பயங்கர குற்றங்களில் ஈடுபடும் நிலையில், அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்து அவர்களை நாடுகடத்துதல் முதலான நடவடிக்கைகளை எடுக்க அரசைக் கோருகிறது. 

மேலும், ஆப்கன் நாட்டுப் பெண்கள் புகலிடம் கோரும் விடயத்தில், தாமாகவே அவர்கள் புகலிடம் பெற தகுதிபெறும் நிலையை மாற்றி, தற்காலிக அனுமதி நிலை மட்டுமே வழங்குதல், புகலிடம் தொடர்பான விடயங்களில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு தடைகள் விதித்தல் ஆகிய விடயங்களும் அந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மொத்தத்தில், புகலிடம் தொடர்பான விதிகளை கடுமையாக்க அந்த தீர்மானம் கோரிய நிலையில், சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment