TamilsGuide

துருக்கியில் தரையிறங்கும்போது ஜெட் விமானம் விபத்து

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற தனியார் ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளர் என மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Cessna Citation Latitude ரகத்தைச் சேர்ந்த குறித்த தனியார் விமானம், தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தீப்பிடித்துள்ளது.

விமான நிலைய அவசர தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

துருக்கி ஊடகங்களின் தகவலின்படி, இந்த தனியார் ஜெட் துருக்கியின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Akfen Holding நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பிரபல தொழிலதிபர் Hamdi Akın என்பவருக்கு சொந்தமானதாகும்.

TC-AKF என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் செப்டம்பர் 14 ஆம் திகதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக லிபியா நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
 

Leave a comment

Comment