மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அன்ரனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை, தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
குறித்த சந்திப்பானது, இன்று (09.09.2026) இடம்பெற்றது.
இதன்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மேலும், மன்னார் மறைமாவட்ட ஆயருக்கு கந்தையா பாஸ்கரனால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


