Russia shuts german consulate: ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டில், ரஷ்யாவில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டது.
ரஷ்ய அரசு, ஜேர்மனியின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும், செப்டம்பர் 18 திகதிக்குள் அங்கு பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
ரஷ்யா-ஜேர்மனி உறவுகள் ஏற்கனவே உக்ரைன் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தூதரகம் மூடப்பட்ட நடவடிக்கை இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்கியுள்ளது.
கடந்த வாரம் லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்யா திட்டமிட்டதாக ஜேர்மனி குற்றம் சாட்டியது.
அதற்கு பதிலாக, ரஷ்யா ஜேர்மன் தூதரகத்தை மூடுவதோடு, Goethe Institute பணியாளர்களும் செப்டம்பர் 13-க்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஜேர்மனி ஏற்கனவே ரஷ்யாவின் பான் தூதரகத்தையும், மாஸ்கோ கலாச்சார மையத்தையும் மூடியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியம், லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் “அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம்” எனக் கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், “ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம், உக்ரைனுக்கு முக்கிய ஆதரவாளராக இருக்கும் ஜேர்மனி மற்றும் ரஷ்யா இடையேயான உறவை மேலும் கடுமையாக்கி, ஐரோப்பிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.


