TamilsGuide

மத்திய கிழக்கு பதற்றம் - உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.19% உயர்ந்து, பெரல் ஒன்றுக்கு $ 96.13 டொலரை எட்டியுள்ளது.

இது முந்தைய விலை விட 1.96% அதிகமாகும்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, உக்ரைன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நிலவும் மோதல்கள், உலகளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சந்தையில் பேரழிவு அபாயத்தை அதிகரித்து வருவதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment