TamilsGuide

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸாரிடம் சரண்

நுவரெலியா பகுதியில், தனது மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிய கணவன் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்தியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார்.

காயமடைந்த மனைவியை அப்பகுதி மக்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர், நுவரெலியா பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பொரலந்தா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சித்ரா தேவி ஆவார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட 32 வயதான சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 

Leave a comment

Comment