TamilsGuide

எல் நினோ காரணமாக பனாமா ஊடான கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

எல் நினோ (El Niño) காரணமாக , பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 36 கப்பல்கள் கடந்து செல்லும் நிலையில், செப்டம்பர் 15 முதல் 32 கப்பல்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்று பனாமா கால்வாய் ஆணையம் (ACP) வியாழக்கிழமையன்று (20) கப்பல் நிறுவனங்களிடம் தெரிவித்தது.

காலநிலை மாற்றத்தால்  ஏற்படும்  விளைவுகள்

எல் நினோ (El Niño) என்பது கடல் மேற்பரப்பு அவ்வப்போது வெப்பமடையும் ஒரு நிகழ்வாகும் இது உலகளாவிய வானிலை அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தால் இதன் விளைவுகள் மேலும் தீவிரமடைவதால், இந்த ஆண்டு இந்நிகழ்வு குறிப்பாக வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் தொடர்பான மோதல்களால், மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையிலும், கப்பல் போக்குவரத்துத் துறை ஏற்கனவே கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு வரும் நிலையிலும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

புதிய நடவடிக்கைகள் செப்டம்பர் 3 முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே கப்பல்கள் பயணிக்க வேண்டிய நேரத்தையும் தூரத்தையும் பனாமா கால்வாய் பெருமளவு குறைக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 14,000 கப்பல்கள் இந்தச் செயற்கை நீர்வழியைப் பயன்படுத்துகின்றன; இது ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் செயல்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.
 

Leave a comment

Comment